Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், பணகுடி காவல் சரகத்துக்கு உட்பட்ட, காவல்கிணறு மற்றும் வடக்கன்குளம் பகுதிகளில், பணகுடி காவல் நிலையத்தின் தலைமைக் காவலரான ஜெகதீஷ், ரோந்து பணியினை மேற்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியில், சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லிக்கற்களால், அந்தவழியாக வநதவர்கள் வழுக்கி கீழே விழுந்து, காயமடைவதைக் கண்ட தலைமைக்காவலர் ஜெகதீஷ், உடனடியாக அந்த சாலைக்கு அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்தவர்களிடம் துடைப்பம் ஒன்றை கேட்டுப்பெற்றார்.
அதனைக் கொண்டு, சாலையில் கிடந்த ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்தி, சாலையை சுத்தமாகி, தொடர்ந்து யாரும் கீழே விழாதவாறு பாதுகாத்தார். தலைமைக் காவலர் ஜெகதீஷின் சேவையை, அந்த பகுதி மக்களும், அவ்வழியாக வந்து சென்றவர்களும், வெகுவாகப் பாராட்டி, வாழ்த்தும் தெரிவித்தனர்.
இந்த செய்தியினை, சமூக வலை தளங்கள் மூலமாக அறிந்த, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன், பணகுடி தலைமைக்காவலர் ஜெகதீஷை, பாளையங்கோட்டை, மிலிட்டரி லைன் பகுதியில் உள்ள, தம்முடைய அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, நற்சான்றிதழ் வழங்கி பாராட்டி, கவுரவித்தார்.